திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:கற்பக விநாயகர் கோவில்.

திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:

        திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில் தான் கற்பக விநாயகர் கோவில்.

எங்கு உள்ளது:

       இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பட்டி என்ற
ஊரில் உள்ளது.


எப்படி செல்வது: 

              இக்கோவிலுக்கு சிவகங்கை மாவட்ட்டத்தில் உள்ள திருப்புத்தூர் என்ற ஊரில் இறங்கி காரைக்குடி செல்லும் சாலையில் பிள்ளையார் பட்டி என்ற
ஊர் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

         இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் பெயர்:

        இக்கோவிலில் உள்ள மூலவர் விநாயகர் ஆவர் . அவர் பெயர் கற்பக விநாயகர்.

ஸ்தல பெருமை:

      முருக பெருமானுக்கு எப்படி அறுபடை வீடு உள்ளதோ அதேபோல் விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. இது ஐந்தாவது படை வீடாகும்.

கோவில் பெருமை:

       இந்த கோவிலில் விநாயகர் மூலவராக கருதப்படுகிறார். மேலும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று சுமார் பதினெட்டு படி அளவில் ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.

வேண்டுதல்கள்:

         இந்த கோவிலில் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். மேலும் இந்த கோவிலில்  பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்த்திரம் சாற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

ஸ்தல விருக்ஷம்:

       இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷம் மருத
மரம்.

சிரார்த்தம் பற்றிய தகவல்கள்


Image result for சிரார்த்தம் images


சிரார்த்தம் பற்றிய தகவல்கள் :

        சிரார்த்தம் எனப்படும் திவசம் என்பது இறந்தவர்களின் மன நிம்மதிக்காக செய்யப்படும் ஒன்றாகும். மேலும் இந்த சிரார்த்தம் என்பது வருடத்திற்கு ஒரு முறை பித்ருக்களுக்கு அளிக்கப்படும் உணவு ஆகும்.

பித்ரு:

        பித்ரு என்றால் இறந்தவர்களின் ஆன்மா என்பது பொருள்.

Image result for amavasai images

எப்போது செய்வது:

           இறந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பூலோகத்திற்கு வர இயலாது. அவர்களுக்கு அமாவாசை பவுர்ணமி  மற்றும் மஹாளய அம்மாவாசை மற்றும் அவர்களின் இறந்த திதி அன்று மட்டும் வந்து அவர்களுக்கு அளிக்கபடும் உணவு மனதார புசித்து வாழ்த்தி விட்டு செல்வர் என்பது ஐதீகம்.

தர்ப்பணம்:

     தர்ப்பணம் என்பது மாத மதம் கொடுப்பது ஆகும். தர்ப்பணம் என்பது காலை ஏழு மணிக்கு முன்பாக கொடுக்க வேண்டும். இந்த தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து காலை ஏழு மணிக்குள் கொடுக்க வேண்டும்.


Image result for எள் நீர்

 எள் நீர்:

        தர்ப்பணத்தில் கொடுக்கப்படும் எள் மற்றும் நீர் கலந்த கலவை பித்ருக்களின் அமிர்த உணவாக செல்கிறது.

     Image result for தர்ப்பை

தர்ப்பை:

         தர்ப்பணம் செய்யும் போது தர்ப்பை புல் எனப்படும் புல்லினை  பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தர்ப்பை புல்லில் மட்டுமே இறந்தவர்கள் ஒளி வடிவில் வந்து இருப்பதாக ஐதீகம்.

சுவாதேவி :

     சுவாதேவி எனப்படும் ஒரு தேவி தான் இறந்தவர்களின் ஆத்மாக்களை இந்த தர்ப்பை புல் மூலமும் நாம் கொடுக்கும் எள் மற்றும் நீர் மூலமும் அவர்களுக்கு கொடுத்து இந்த புள் மூலமாக மேல் லோகத்திற்கு அழைத்து செல்லப்படும் என்பது ஐதீகம்.


Image result for நதிகள்

நதிகள்:

   தர்ப்பணம் என்பது புண்ணிய நதிகளில் தான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முழு பலன் கிட்டும். புண்ணிய நதியில் செய்வதானால் அதிகாலை எழுந்து புண்ணிய நதியில் குளித்து விட்டு பின் அந்த நதியிலே தர்ப்பணம் கொடுக்க பித்துக்களின் ஆசி முழுவதுமாக கிடைக்கும்.

இறந்தவர்களின் திதி:

         ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் திதி, நாள், கிழமை மற்றும் இறந்த நேரம் இவற்றை குறித்து கொண்டு வருடாவருடம் அந்த திதியில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் கடன் சுமை, குடும்ப தகராறு நீங்கி வாழ்வில் முன்னேறலாம்.

அமாவாசை:

   பொதுவாக அமாவாசை , சூரிய கிரஹணம் மற்றும் சந்திர கிரஹணம் அன்று இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்திட அவர்களின் சத்தி மேலும் அதிகமாகும். அமாவாசை தினத்தில் யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். இது மிக முக்கிய ஒன்றாகும்.


Image result for தர்ப்பணம்

தர்ப்பணம்:

    ஒருவர் ஒரு வருடத்தில் சுமார் தொன்னூற்று ஆறு முறை தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் நாளில் வெங்காயம், பூண்டு, சோம்பு போன்ற வாசனை பொருட்களை சாப்பிட கூடாது. மாமிசம் சாப்பிட கூடாது.

குலதெய்வ வழிபாடும் அதன் பயன்களும்






குலதெய்வ வழிபாடும் அதன் பயன்களும்:

         குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் முதல் தொன்று தொட்டு வரும் ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகிறது.

குலதெய்வம் என்பது:

        குலதெய்வம் என்பது நமது குடும்பத்தை தலைமுறை தலைமுறையாக காப்பாற்றும் தெய்வம் ஆகும். ஆதலால் தான் இதனை குலதெய்வம் என்று கூறுகின்றனர்.

Image result for குலதெய்வம் images

எதனால் குலதெய்வ வழிபாடு:

     குலதெய்வ வழிபாடு செய்வதால் கடன் தொல்லை , நோய் பிணி, குடும்ப சண்டை ஆகியவை அகலும். வருடம் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்வது மிக அவசியம்.

குலதெய்வம் உருவான முறை:

        ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலைமுறை தலைமுறையாக ஒரு தெய்வம் பாதுகாத்து வருவது வழக்கம் அப்படி உருவானது தான் குலதெய்வம் எனப்படும்.

        மேலும் பெண் சுமங்கலியாகவோ அல்லது குழந்தையாகவோ இறந்திருந்தால் அந்த பெண் அந்த குடும்பத்தை காப்பாள் என்பது ஐதீகம். அந்த பெண்ணையே குலதெய்வமாக சில குடும்பங்கள் வழிபட்டு வருகின்றனர்.

குலதெய்வ பூஜை :

       குலதெய்வ பூஜை என்பது முறையே நடப்பதில்லை . அந்த குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அல்லது அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆரம்பித்த ஒன்றாக உள்ளது. அவை அனைத்தும் அந்த குடும்பத்தில் உள்ளவர் மட்டுமே பங்கேற்க முடியும்.

Image result for குலதெய்வம் images

குலதெய்வ வழிபாடு:

       குலதெய்வ வழிபாட்டில் அதிகமாக வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம். உதாரணமாக குழந்தை பிறந்தால், காத்து குத்துதல், வேலை கிடைத்தால் மற்றும் விஷேஷ தினங்களில் குல தெய்வ வழிபாடு நடத்தினால் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.


கடன் தொல்லையில் இருந்து விடுபட


கடன் தொல்லையில் இருந்து விடுபட:

       கடன் தொல்லையில் இருந்து விலக குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம்.

வீட்டில் இருக்க கூடாதவை:       

         கடன் பிரச்சனை இருந்தால் வீட்டில் சில பொருள்கள் இருக்க கூடாது. ஏனெனில் அவை வீட்டில் செல்வம் சேர விடாமல் தடுத்து விடும்.
அவைகள்

     புறாக்கூடு, உடைந்த கண்ணாடி, வாடிய மலர்கள், தேன்கூடு, சிலந்தி வலை ஆகையவைகளை முதலில் களைந்தாலே வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

வீட்டில் இருக்க வேண்டியது :


Image result for golden fish images

         வீட்டில் மீன்கள் வளர்த்தால் செல்வம் சேரும்  . மீன்கள் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ஆகும். மீன்களை சிறிது நேரம் பார்த்தால் மனக்குழப்பம் அனைத்தும் நீங்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும்.

      மேலும் மீன்களில் கோல்டன் பிஷ் எனப்படும் வண்ண மீன்களை வளர்ப்பது மிகவும் பயன் தரும். மேலும் இந்த மீன்களை வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு என்ற திசைகளில் மட்டுமே வைக்க வேண்டும்.

விளக்கு ஏற்றும் முறை:
Image result for kamatchi lamp


       வீட்டில் அதிகமாக ஏற்றப்படும் விளக்கு காமாட்சி விளக்காக இருக்க வேண்டும். அதில் விளக்கு ஏற்றும் பொது டைமென்ட் கல்கண்டு போட்டு விளக்கு ஏற்றிட வேண்டும்.

ஊறுகாய்:

Image result for pickle images

        வீட்டில் விதவிதமான ஊறுகாய் வகைகளை அதிகம் வைத்திருக்க வேண்டும். ஊறுகாய் குபேரருக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஊறுகாய்களை ருசிப்பதற்காகவே குபேரன் வீட்டில் இருப்பர் என்பது ஐதீகம்.


திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:

திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:
        திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில் தான் கற்பக விநாயகர் கோவில்.
எங்கு உள்ளது:
       இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பட்டி என்ற ஊரில் உள்ளது.
எப்படி செல்வது: 
              இக்கோவிலுக்கு சிவகங்கை மாவட்ட்டத்தில் உள்ள திருப்புத்தூர் என்ற ஊரில் இறங்கி காரைக்குடி செல்லும் சாலையில் பிள்ளையார் பட்டி என்ற ஊர் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
         இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் பெயர்:
        இக்கோவிலில் உள்ள மூலவர் விநாயகர் ஆவர் . அவர் பெயர் கற்பக விநாயகர்.
ஸ்தல பெருமை:
      முருக பெருமானுக்கு எப்படி அறுபடை வீடு உள்ளதோ அதேபோல் விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. இது ஐந்தாவது படை வீடாகும்.
கோவில் பெருமை:
       இந்த கோவிலில் விநாயகர் மூலவராக கருதப்படுகிறார். மேலும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று சுமார் பதினெட்டு படி அளவில் ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.
வேண்டுதல்கள்:
         இந்த கோவிலில் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். மேலும் இந்த கோவிலில்  பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்த்திரம் சாற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
ஸ்தல விருக்ஷம்:
       இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷம் மருத 
மரம்.

நவகிரஹ தோஷங்கள் நீங்கவும் கடன் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில்:: சூரினார் கோவில்.

நவகிரஹ தோஷங்கள் நீங்கவும் கடன் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில்:

       நவகிரஹங்கள் தோஷங்கள் அனைத்தும் போகவும் வாழ்வில் செல்வம் செழிக்கவும் வழிபட வேண்டிய கோவில் தான் சூரினார் கோவில். 

எங்கு உள்ளது:

         இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவில் என்ற இடத்தில் உள்ளது.

எப்படி செல்வது:
              இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் உண்டு. கும்பகோணத்தில் இருந்து திருமங்கலக்குடி காளி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 


சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

             இங்குள்ள சிவ பெருமான் சிவசூரியன் என்றும் அம்பாள் உஷாதேவி, சாயாதேவி என்ற பெயர் கொண்டும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

ஸ்தல சிறப்பு :

           இந்த கோவிலில் ஏழரை சனி , அஷ்டமத்து சனி மற்றும் கிரக தோஷங்கள் யாவும் விலக இங்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

        முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் மிக சிறந்த பக்திமான் ஆவர். அவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. அதனால் இங்குள்ள நவகிரஹங்கள் அனைத்தையும் வேண்டி தவம் மேற்கொண்டார். நவகிரஹங்களும் முனிவருக்கு காட்சி தந்து தொழுநோயை இருந்து விடுவித்தது. இதனை கண்ட பிரம்மா கோபம்
கொண்டார். 

            பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் தான் அவரவர் வாழ்வு அமையும். ஆதலால் என் காலவ முனிவருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்தீர்கள் என்று நவகிரஹங்களுக்கு அந்த நோய் பற்றி கொள்ளுமாறு சாபம் கொடுத்தார். பிறகு நவகிரஹங்கள் அனைத்தும் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு சாப விமோசனம் பெற்று கொண்டதால் இந்த தளத்தில் நவகிரஹங்கள் அனைத்திற்கும் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது வரலாறு.

சூரியனின் தோற்றம்:

        சூரியனுக்கு இரண்டு இடத்தில் மட்டுமே கோவில் உண்டு. ஒன்று சூரியனார் கோவில் மற்றொன்று கோனார்க் கோவில். இங்கு சூரியன் சாந்தமாக தனது இரு மனைவியருடன் காட்சி தருகிறார்.

தோஷம் நீங்க:

           இங்கு தோஷங்கள் யாவும் நீங்க பன்னிரண்டு ஞாயிறு கிழமை இந்த கோவிலுக்கு வந்து நீராடி மனதார வணங்கினால் தோஷம் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

வேண்டுதல்கள்:

           இந்த கோவில்களில் நவகிரஹ தோஷத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து அன்னதானம் செய்கின்றனர்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

         இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக வெள்ளெருக்கு உள்ளது. மற்றும் திருக்குள தீர்த்தமாக சூரிய தீர்த்தம் உள்ளது.

விஷேஷ தினங்கள்:

     ரத சப்தமி மற்றும் தை மாதம் பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

சீமந்தம் மற்றும் வளைகாப்பும் அதன் பயன்களும் :

Image result for valaikappu images


சீமந்தம் மற்றும் வளைகாப்பும் அதன் பயன்களும் :

          சீமந்தம் மற்றும் வளைகாப்பு கர்ப்பிணி பெண்ணிற்கு நடத்தப்படும் ஒரு விழா ஆகும். இந்த விழாஆனது கருவில் குழந்தையை சுமக்கும் பெண்ணை தனித்துவமாக காட்டுவதற்காகவும் அந்த பெண்ணின் மனம் குளிரவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.
         இந்த நிகழ்ச்சி இந்தியா போன்ற கலாச்சாரம் மிகுந்த நாடுகளில் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி   ஆகும்.




Image result for valaikappu images

எதற்காக வளைகாப்பு:

          வளைகாப்பு என்பது அறிவியல் ரீதியாக பிறக்கப்போகும் குழந்தைக்கு செவி வளம் அதிகமாக வர வளைகாப்பு அணிவிக்கின்றனர். இந்த வளைகாப்பு என்பது நம் முன்னோர்கள் கூறியதாவது கர்ப்பிணிகளுக்கு பிரசவம் இனிது நடக்க வளையல் அணிவிக்கின்றனர்.



Image result for valaikappu images
எப்போது செய்வது:

         இந்த வளைகாப்பு என்பது கருவுற்ற மாதத்தில் இருந்து ஐந்து ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் நடத்தப்படும் ஒரு விழா ஆகும். மேலும் இந்த வளைகாப்பின் போது கர்ப்பமான பெண்ணிற்கு மணமகள் போன்று அலங்காரம் செய்து பிறகு தான் வளைகாப்பு போடா வேண்டும் . அப்படி வளையல் போடும்போது முன்னரே குழந்தைகளை பெட்ரா பெண் தான் வளையல் போட வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமான பெண்ணிற்கு இரண்டு வளையல் போட்டு தானும் அணிய வேண்டும். 


வளைகாப்பு முடிந்ததும்:


          கருவுற்ற பெண்ணிற்கு வளைகாப்பு போட்டதும் பெண் அவளின் தாய் வீட்டிற்க்கு செல்ல வேண்டும். ஏனெனில் வளைகாப்பு போட்ட பெண் அவளின் வீட்டிற்கு சென்றால் அவள் பயம் இல்லாதவளாய் இருப்பாள். அது அவளின் பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பது ஐதீகம்.



கேது தோஷம் போக்க வழிபட வேண்டிய கோவில் :: கீழப்பெரும்பள்ளம்

Image result for kethu images



கேது தோஷம் போக்க வழிபட வேண்டிய கோவில் :

        கேது தோஷம் போக்கிட வழிபட வேண்டிய கோவில் தான் நாகநாத ஸ்வாமி கோவில் கீழப்பெரும்பள்ளம் .

எங்கு உள்ளது:

   இந்த கோயில் கீழப்பெரும்பள்ளம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

       இக்கோவிலுக்கு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வழியே பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் என்ற ஊர் உள்ளது.அங்கு தான் பேருந்து நிறுத்தம்உள்ளது .  அதில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் .

Image result for naganatha swamy images



ஸ்வாமி மற்றும் அம்பாள் பெயர்:

          இங்குள்ள சிவ பெருமான் நாகநாத ஸ்வாமி என்றும் அம்பாள் சௌந்தர்யனாயகி என்ற பெயருடனும்          அழகுற காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:

           இந்த கோவிலில் கேது தோஷம் போக பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

              கேது என்பவர் அரக்க குலத்தை சேர்ந்தவர் ஆவார். பாற்கடலில் அம்ரிதத்தை கடையும் போது மஹாவிஷ்ணு மோகினியாக மாறி தேவர்களுக்கு அகப்பையால் ஊற்றி கொடுத்து கொண்டு இருந்தார். கேது அமிர்தம் உன்ன ஆசைப்பட்டு தேவர்களில் ஒருவராக மாறி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து அமிர்தம் வாங்கி உண்டான். இதனை கண்டு சூரியன் மற்றும் சந்திரன் மகாவிஷ்ணுவிடம் கூறிவிட்டனர். பின்பு கோபம் கொண்ட மஹாவிஷ்ணு தனது கையில் உள்ள அகப்பையை  கொண்டு கேதுவின் தலையில் அடித்தார். உடனே கேதுவின் தலை வேறு உடல் வேறு ஆனது. அமிர்தம் உண்டதால் கேதுவின் உயிர் மட்டும் இருந்தது. பின்பு தான் செய்த தவறினை புரிந்து கொண்டு சிவ பெருமானிடம் முறையிட்டார். சிவ பெருமானும் கேதுவை ஐந்து தலை நாகமாக செம்மை நிறமாக மாற செய்துவிட்டார்.

கோவில் வரலாறு:

        பாற்கடலில் அமிர்தம் கடைய மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்ற நாகத்தினை கயிறாகவும் கொண்டு அமிர்தம்  கடைந்தனர். அப்போது வலி தாங்க முடியாமல் வாசுகி நஞ்சு கக்கியது. நஞ்சினால் அமிர்தம் யாவும் நஞ்சாகிவிடும்  என்று எண்ணி சிவ பெருமான் அந்த நஞ்சினை உண்டு அந்த வாசுகி என்ற நாகத்தினை தூக்கி வீசினார். பிறகு வாசுகி நாகம் சிவ பெருமான் நஞ்சு உண்டதற்கு தான் தான் காரணம் என்று எண்ணி சிவ பெருமானை நோக்கி தவம் செய்தது. பிறகு சிவ பெருமான் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். எனக்கு காட்சி கொடுத்த நீங்கள் இனிமேல் இந்த தளத்தில் நாகநாதசுவாமி என்று பெயர் கொண்டு தன்னை காண வரும் பக்தருக்கு அருள்புரிய வேண்டும் என்று கூறியது. சிவ பெருமானும் அவ்வாறே இந்த இடத்தில் வாசம் பெற்றார்.


Image result for naganatha swamy images

கோவில் அமைப்பு:

      இந்த கோவிலில் ராஜ கோபுரம் கிடையாது. சிவ பெருமான், அம்பாள், சூரியன், சந்திரன், சனி பகவான் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

கேது அமைப்பு:

       இந்த கோவிலில் கேது பகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார். கேது பகவான் ஐந்து தலை நாகத்தின் தலையும், மனித உடலும் கொண்டு கைகளை கூப்பி வணங்குவது போன்று காட்சி தருகிறார்.

வேண்டுதல்கள்:

       இக்கோவிலில் அதிகமாக கேது தோஷம் போக்கவே பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாள் மற்றும் கேதுவிற்கு அபிஷேகம் செய்தும் அர்ச்சனை செய்தும், தீபம் ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.


புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் :: அமிர்தகடேஸ்வரர் கோவில் சாக்கோட்டை.

Image result for amirthakadeswarar temple images


புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் :

          புண்ணியம் கிட்டிட வழிபட வேண்டிய கோவில் தான் அமிர்தகடேஸ்வரர் கோவில் சாக்கோட்டை.

எங்கு உள்ளது:

           இந்த கோவில் கும்பகோணத்திற்கு அருகில் சாக்கோட்டை என்ற இடத்தில் உள்ளது.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

            இத்திருக்கோவில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

            இங்குள்ள சிவ பெருமான் பெயர் அமிர்தகதீஸ்வரர் என்றும் அம்பிகை அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஸ்தல வரலாறு:

       முன்னொரு காலத்தில் சிவ பெருமான் ஊழி காலத்தில் உயிர்களை கலசத்தில் அடக்கி ஒரு இடத்தில் சிவ பெருமான் வைத்தார். அப்போது புயல் வந்ததால் அந்த கலசம் இந்த ஊரில் வந்து தங்கியது. கலசம் வந்து தங்கியதால் இந்த ஊர் கடையநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

Image result for kalasam images


கோவில் சிறப்பு:

        இந்த கோவிலில் மாசி மகம் அன்று கும்பகோணம் மஹாமஹம் அன்று மகாமக குளத்தில் காட்சி தருவது சிறப்பு.



 சிறப்பு   தினங்கள் :

         இந்த கோவில் பிரதோஷம், மாசி மகம், திருக்கார்த்திகை தீபம் முதலியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

வேண்டுதல்கள்:

         இந்த கோவிலுக்கு செய்த பாவங்கள் போக இந்த கோவிலுக்கு மக்கள் அதிகமாக வருகின்றனர்.
பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் அர்ச்சனை செய்தும் அபிஷேகம் செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.



தெய்வமும் மலர்களும்


Image result for arali flower images



மலர்களை கொண்டு வழிபட்டால் கிடைக்கும் நன்மை:

         நாம் மனதார வேண்டி கொள்ளும் போது கடவுளுக்கு புஷ்பங்களை கொண்டு வழிபட்டால் கிடைக்கும் நன்மை அதிகம்.

மலர் நன்மை:

         கடவுளுக்கு வசம் கொண்ட மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நன்மைகள் யாவும் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் இந்த மலர்கள் இறைவனின் திருவடிகளை பற்றிய பின் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
மலர்களை கொண்டு இறைவனுக்கு பூஜை செய்தால் கிடைக்கும் பலனானது நூறு மடங்கு ஆகும். மேலும் இந்த மலரில் அதிகமாக மருத்துவ குணமும் உள்ளது.


Image result for jasmine flowers pictures

எப்போது மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்:

          திங்கள் கிழமைகளில் மல்லிகை, முல்லை கொண்டு இறைவனை அர்ச்சனை செய்தால் எதிரிகள் குறைந்து மனக்கஷ்டங்கள் குறையும் . 
          செவ்வாய் கிழமைகளில் சிகப்பு அரளி, கஸ்தூரி மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கி , ஆயுள் அதிகரிக்கும்.
            புதன் கிழமைகளில் எல்லா மலர் கொண்டும் அர்ச்சனை செய்தால் குழந்தை பேரு கிட்டி , குழந்தைக்கு நல்ல எதிர் காலம் கிடைக்கும். நோய்கள் அத்தனையும் தீரும்.
              வியாழ கிழமை மஞ்சள் நிறத்தில் உள்ள மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் திருமண தடை குழந்தை பாக்கியம் கிட்டி எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
               வெள்ளி கிழமை  மல்லிகை மலர் கொண்டு பூஜை செய்தால் செல்வம் பெருகும் குழந்தை வாழ்வில் இன்பம் பொங்கும்.
                    சனி கிழமை அன்று மனோரஞ்சிதம் என்கிற மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் மன தைரியம் பிறக்கும்.
ஞாயிறு அன்று தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் அமைதி கூடும். ஒற்றுமை நிலவும்.



பிரதோஷ விரதமும் அதன் பயன்களும்

பிரதோஷ விரதம் இருப்பதால் நடக்கும் நன்மை:

       பிரதோஷ விரதம் என்பது பிரதோஷ நாள் அன்று காலை முதல் மாலை வரை இருக்கும் விரதம் ஆகும். மேலும் இந்த விரதத்தின் போது மனதில் தூய்மை பெற்றிட வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும்.







Image result for lingam and nandi
பிரதோஷம் :

      
           பிரதோஷம் என்பது பிற தோஷங்கள், இன்னல்கள் யாவும் நிவர்த்தி என்பது பொருள். பிரதோஷ விரதம் என்பது சிவ பெருமானின் அருள் பூரணமாக கிட்டிட இருக்க வேண்டிய ஒரு முக்கியமான விரதம் ஆகும்.

எப்படி விரதம் இருப்பது:

        பிரதோஷ நாள் அன்று காலை தலைக்கு குளித்து விட்டு சிவ பெருமானை வணங்கி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். பிறகு காலை முதல் மாலை வரை ஏதும் சாப்பிடாமல் இருந்து மாலை குளித்து விட்டு கோவிலுக்கு சென்று  பிரதோஷ வேளையில் சிவ பெருமானை தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்ததும் எதாவது உண்ண வேண்டும். முதலில் நீர் ஆகாரம் பருகிய பின்னரே சாப்பிட வேண்டும்.

ஏற்படும்நன்மை:

          பிரதோஷ விரதம் இருப்பதால் கடன் தொல்லை, வியாதிகள் விலகும், மனக்குழப்பம் தீரும்.



Image result for lingam images


எப்போது ஆரம்பிப்பது :

           பிரதோஷ விரதம் சித்திரை, வைகாசி, கார்த்திகை, ஐப்பசி ஆகி எதாவது ஒரு மாதத்தில் வரும் சனி பிரதோஷம் அன்று தான் ஆரம்பிக்க வேண்டும்.

செய்ய கூடாதது:

           பிரதோஷ காலத்தில் சாப்பிட கூடாது, எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது, விஷ்ணு தரிசனம் செய்ய கூடாது 

திருமண தடை நீங்க வழிபட வேண்டிய கோவில் :: குற்றாலீஸ்வரர் திருக்கோவில்


Image result for kutraleeswaran kovil images
குற்றாலீஸ்வரர் திருக்கோவில்


திருமண தடை நீங்க வழிபட  வேண்டிய கோவில் :

       திருமண தடை நீங்கி திருமணம் விரைவில் கைகூடிட வழிபட வேண்டிய கோவில் தான் குற்றாலீஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

           இந்த திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டடத்தில் உள்ள குற்றாலம் என்ற ஊரில் உள்ளது.

எப்படி செல்வது:

            இக்கோவிலுக்கு தென் காசியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் , செங்கோட்டையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்வத்தர்க்கு தென்காசியில் இருந்தும் செங்கோட்டையில் இருந்தும் பேருந்துகள் உள்ளது.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

            இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் குற்றாலநாதர் என்றும் அம்பிகை குழல்வாய் பொழியம்மை என்ற பெயருடன் அழகுற காட்சி தருகின்றனர். 

கோவில் சிறப்பு:

         இந்த கோவிலில் தான் சிவ பெருமான் அகத்திய முனிவருக்கு காட்சி தந்தார் என்பது வரலாறு.

ஸ்தல வரலாறு:

                       கைலாயத்தில் சிவ பெருமானுக்கும் பார்வதிதேவிக்கு திருமணம் நடக்க விருந்து. திருமணத்தை கண்டுகளிக்க அனைவரும் கைலாயத்தில் ஒன்று கூடினர். அப்போது பூமியின் பாரம் தாங்க முடியாமல் வடக்கு திசை கீழும் தெற்கு திசை மேலேயும் போனது. அப்போது அதனை சரி செய்வதற்கு சிவ பெருமான் அகத்திய முனிவரை தெற்கு திசையில் உள்ள பொதிகை மலைக்கு பொய் வருமாறு கூறினார். அகத்தியரே சிவ பெருமானின் திருமண காட்சியை காண வேண்டும் என்று கூறினார். அனால் சிவ பெருமான் பொதிகை மலையில் காட்சி தருவதாக அகத்திய முனிவரிடம் கூறினார். அகத்தியரும் பொதிகை மலைக்கு சென்றார்.

         பொதிகை மலையில் உள்ள ஒரு அருவியில் நீராடி விட்டு அங்கு அருகில் இருக்கும் விஷ்ணு கோவிலுக்கு செல்ல முயன்றார். அகத்தியர் வைணவர் இல்லாததால் அந்த கோவிலுக்கு செல்ல தடை விதித்தது. பிறகு அங்கு உள்ள முருக பெருமான் கோவிலுக்கு சென்று அங்கு முருகரை வழிபாட்டு முருகனிடம் ஆலோசனை கேட்டார். பிறகு முருக பெருமான் வைணவர் வேடம் போட்டு அந்த கோவிலுக்கு செல்லும் படியும் அங்கு தான் சிவ பெருமான் திருமண கோலம் உள்ளது என்றும் கூறினார். 

             அகத்தியரும் முருகர் கூறியவாறே சென்றார். அங்கு உள்ள ஒரு விஷ்ணு பகவானின் தலையில் கை வைத்ததும் அங்குள்ள சிலை சிவ பெருமானை மாறியது. சிவ பெருமானும் திருமண கோலத்தை காட்சி தந்தார். அகத்தியர் சிலையை சிவ பெருமானாக மாற்றியதால் அருகில் இருந்த ஸ்ரீதேவி பார்வதி தேவி யாகவும் பூதேவி பராசக்தியாகவும் மாறியதாக வரலாறு கூறுகிறது. அகத்தியர் பதித்த கை விரைகள் இன்றும் சிவ பெருமான் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு:

         இந்த கோவிலில் விநாயகர், முருகர், சப்தகன்னியர், லிகோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். 

பாவம் போகும் தீர்த்தம்:
          இந்த கோவிலில் வடவருவி என்பது பாவங்களை போக்கும் தீர்த்தமாக உள்ளது. இந்த குளத்தில் நீராடினால் பாவங்கள் அணிவதும் கழுநீராக வெளியேறும் என்பது ஐதீகம்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

          இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷமாக உள்ளது பலா மரம் மற்றும் திருக்குள தீர்த்தம் சிவமதுகங்கை ஆகும். மேலும் இந்த கோவிலில் உள்ள பலா மரத்தில் உள்ள பலா சுளைகள் அனைத்தும் லிங்க வடிவில் உள்ளது மிக சிறப்பாக உள்ளது.

விஷேஷ தினங்கள்:

             இந்த கோவிலில் பிரதோஷம், மாசி மகம் தை பூசம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தீபங்களும் அதன் பயன்களும்

 தீபங்கள் ஏற்றுவதால் வரும் நன்மைகள் :

        தீபங்கள் ஏற்றுவதால் வரும் நன்மைகள் பல உண்டு. மேலும் இந்த தீபங்கள் ஏற்றி வாழ்வில்  இன்பம் பெறலாம். மேலும் இந்த தீபங்கள் ஏற்றுவதன் மூலம் சில பரிகாரங்கள் செய்த பலனும் உண்டு.


Image result for agal vilakku images




தீப மகிமை:

        எரியும் ஜோதியில் உள்ள காட்சி தருவதாக கிருஷ்ணன் பகவத் கீதையில் கூறியுள்ளார். மேலும் ஒருவர் தனது உயிருக்கு  போராடி கொண்டு இருக்கும் போது கருவறையில் ஏற்றப்படும் தீப ஒளி அவரின் உயிரை காப்பாற்றும் என்பது ஐதீகம்.

         அணைய போகும் தீபத்தை ஒரு எலி அந்த திரியை தூண்டி விட்டத்தால் அந்த எலியானது மஹாபலி சக்ரவர்த்தியாக பிறந்தது என்று வேதாரண்யம் கோவில் வரலாறு கூறுகின்றது.

எளிய தீப பரிகாரங்கள்:

        கோவில்களில் ஒருவரின் ஜாதகத்தில் கிரக தோஷம் இருந்தால் அவர்கள் கோவில்களில் சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் கிரக தோஷம் படி படியாக குறையும் என்பது ஐதீகம்.

எப்போது ஏற்றுவது:

         கோவிலில் தீபம் ஏற்ற மிகுந்த தருணம் என்பது அதிகாலை அல்லது நற்பகல் எனப்படும் உச்சிவேளை அல்லது சந்தியாகாலம் இந்த மூன்றில் எதாவது ஒரு பொழுதில் விளக்கு ஏற்றினால் துன்பங்கள் யாவும் விலகும் .

நெய்தீபம்:
Image result for neivilakku

          ஒருவரின் வாழ்க்வஹில் அதிகமாக கடும் பிரச்சனைகளை கொண்டு இருந்தால் அவர்கள் ணெய் தீபத்தினை கோவில் கருவரையில் உள்ள விளக்கினில் அந்த நெய்யினை ஊற்றினால் துன்பங்கள் யாவும் தீரும் . மேலும் அந்த ஜோதியில் ஊற்றப்படும் நெய்யானது உயிருக்கு போராடுபவரை கூட காப்பாற்றும் என்பது ஐதீகம்.

செல்வம் செழிக்க:

         செல்வம் செழிக்க வீட்டில் தினமும் தீபம் ஏற்றுவது மிக நன்மை பயக்கும். மேலும் வீட்டில் தினமும் அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் அதேபோல் மாலை ஐந்து முப்பது மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வம் செழிக்கும்.



விளக்கு சுத்தப்படுத்தும் முறை:

           விளக்கினை முதல் சுத்தம் செய்த பின்னரே தீபம் ஏற்ற வேண்டும். விளக்கினை செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தேய்க்க கூடாது. ஞாயிறு , திங்கள், சனி, வியாழ கிழமைகளில் மட்டும் தான் விளக்கு தேய்க்க வேண்டும். தேய்க்கும் நேரமும் இரவு நேரங்களில் தேய்க்க கூடாது. சுத்தமான நீர் கொண்டு தான் விளக்கு தேய்க்க வேண்டும். 

            விளக்கு தேய்த்த பின் விளக்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து விளக்கிற்கு ஏற்றாப்போல் ஒரு தாம்பாளத்தில் அட்சதை இட்டு அதில் ஒரு ருபாய் நாணயத்திற் வைத்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும் பிறகு அதன்  மேல் விளக்கு வைத்து அந்த விளக்கில் எண்ணயோ அல்லது நெய்யோ ஊற்றிய பின் தான் திரி போட வேண்டும். வெறும் விளக்கில் திரி போட கூடாது .

விளக்கின் பயன்:

        மண் விளக்கினால் தீபம் ஏற்றினால் எல்லா வளமும் கிட்டும்.
        வெண்கல விளக்கினால் தீபம் ஏற்ற அனைத்து தோஷங்களும் விலகும்.
பித்தளை விளக்கினால் தீபம் ஏற்ற குடுப்பத்தில் ஒற்றுமை நிலவும்.
 செப்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் மனதில் நிம்மதி பொங்கும்.
வெள்ளி விளக்கினால் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
தங்க விளக்கினால் தீபம் ஏற்றினால் ஆயுள் கூடும்.
நவரத்தினம் கொண்டு விளக்கு ஏற்றினால் நவகிரஹ தோஷம் போகும்.
எதை கொண்டு விளக்கு ஏற்றுவது:
        நெய் கொண்டு விளக்கு ஏற்றினால் வீட்டில் எல்லா வளமும் நன்மையும் கிட்டும்.
நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பம் தீரும். எல்லா பரிகாரங்களும் நல்லது.
விளக்கெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் தேவர்கள் அனுகூலம், வசியம், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை கிட்டும்.
கடலை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற தரித்திரம் அதிகரிக்கும்.
இலுப்ப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற கடன் தொல்லை நீங்கி சிவ பெருமான் அருள் கிட்டும்.
தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற குலதெய்வ கடாக்ஷம் மற்றும் கணவன் மனைவியின் இடையே ஒற்றுமை நிலவும்.
பஞ்ச தீபம் எனப்படும் ஐந்து வகை தீபம் கொண்டு விளக்கு ஏற்றினால்  வாழ்வில் சகல விதமான  நன்மைகளும் கிட்டும் .மேலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உள்ள பலன் கொடுக்கும்.
வெப்ப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற கூடாது.

கோவில்களில் செய்யும் பரிகார தீபங்கள்:

 ராகு தோஷம் 21 தீபங்கள்
சனி தோஷம் 9 தீபங்கள்
குரு தோஷம் 33 தீபங்கள்
துர்க்கைக்கு 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள்
திருமண தோஷம் 21 தீபங்கள்
புத்திர தோஷம் 51 தீபங்கள்
சர்ப தோஷம் 48 தீபங்கள்
காலசர்ப தோஷம் 21 தீபங்கள்
களத்திரதோஷம் 108 தீபங்கள்